Monday, September 29, 2014

முதற்சொல்




நீலம் மலர்ந்த நாட்கள் வாசித்தேன்...ஒரு விதத்தில் பிரசவம்தான் இல்லையா!!

சேக்கிழாருக்கு உலகெலாம், சிவபெருமானிடமிருந்து...தங்களுக்கு கண்ணனிடமிருந்து!
நூற்றாண்டுகள் கழித்து இது ஓர் அழகான உருவகமாகப்போகிறது..

நீங்கள் எழுதியிருப்பது போல்,"எங்கோ ஆழத்தில் உள்ள இருண்ட கருவறை ஒன்றிலிருந்து எப்படியோ எழுந்து வரும் ஒரு சொல்லை வைத்துச் சட்டென்று தொடங்கி விடுபவையாகவே எல்லாப் பெரும் படைப்புகளும் உள்ளன. முதல் வார்த்தை ‘வருவது’ வரைக் கவிஞனால் எதையுமே எழுத முடிவதில்லை. அது வந்த பிறகு காவியம் தன் போக்கில் எழுதப் பட்டபடியே இருக்கிறது."

அந்த முதல் சொல் ‘உலகெலாம்’ என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! ஒரு கவிஞனைப் பொறுத்தவரை காவியம் எழுதுவதன் நோக்கம் உலகத்தையே தன் சொல்லால் அள்ளி விட வேண்டுமென்பதே . அந்த முதல் சொல்லை உணர்ந்தபோது சேக்கிழாரின் மனம்தான் எந்த அளவுக்கு பொங்கி எழுந்திருக்கும். ‘உலகம் முழுக்க’ என்ற சொல்லுக்கு பல தளங்கள். இதோ உலகெலாம் கேட்கும் பொருட்டு சொல்கிறேன். உலகில் உள்ள அனைத்தையுமே சொல்லி விடப் போகிறேன்……பெருங்காவியங்களின் முதல் சொல் இவ்வாறு மாபெரும் மன எழுச்சி ஒன்றை அடையாளம் காட்டுவதாகவே அமைகிறது . ‘ ‘மூவா முதலா உலகம்’ ‘ என சீவக சிந்தாமணி ஆரம்பிக்கிறது. ‘ ‘சொல்லும் பொருளும்’ ‘ என மகாகவி காளிதாசனின் ரகுவம்சம்."

வெண்முரசு படைக்கத் தொடங்கிய பிறகு உங்கள் தளம் அதுதான்.சமகாலத்தில் அதனை அவதானிப்பதற்க்கு ஒர்  வாய்ப்பு.


நீலம் ஓர் அழகான கனவனுபவம் (நீலம் 37 வரை).பாலாடி பகடையாடி..காதலாகி கனிந்துரிகி.......நீலம் 38,அதில் ஓர் விழிப்பு, அற்புதமான முடிவு. நிதர்சனம் அவ்வாறு தான் இருக்கும்.


Collective Reading:எத்தனை விதமான பார்வைகள்..அணுகும் பரிமாணங்கள்!!சுவாமி, சண்முகம், அருணாச்சலம், மாணிக்கவேல், ரவிசந்திரிகா, சீனு....கிருஷ்ணன் (Evergreen), அனைவருக்கும் நன்றி...

 துவாரபாலகர் தங்களில் உணர்ந்த சரஸ்வதி கடாக்ஷத்திற்க்கு, தங்கள் தாள் பணிகின்றேன்.