Monday, September 22, 2014

கொற்றவை



ஜெ,

நீலம் பெருகிப்பெருகி உச்ச நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இனி என்ன, இதுக்குமேலே சாத்தியமா என்றெல்லாம் தோன்றும். உடனே அடுத்த அத்தியாயம். இன்றைய மருதம் ஒரு அற்புதமான மலர்

ராதை கிருஷ்ணன் லீலை என்று வைக்காவிட்டாலும் கூட ஆண் பெண் உறவின் ஒரு இடத்தை மிக நுட்பமாக பிடித்துவிட்டது இந்த அத்தியாயம். பெண் மனம் ஆண் வந்து தன்னை வென்று கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறது. தன்னை சுருட்டி கொண்டுசெல்லவேண்டும் என்று கனவுகாண்கிறது

ஆனால் அது நிகழும்போது தான் அவமதிக்கப்பட்டுவிட்டதாகவும் சிறியதாக ஆகிவிட்டதாகவும் உணர்கிறது. அதைத்தான் பாம்பு மிதிபட்டதாக சொல்லியிருக்கிறீர்கள்

கைப்பற்றப்பட ஆசைப்படுவது பயாலஜிக்கல் உண்மை. சீண்டப்படுவது சோஷியல் உண்மை. முதலில் உள்ளது பெண் என்ற இயல்பு. இரண்டாவது சொன்னது ஈகோ. இந்த விளையாட்டில்தான் பெண் ஊசலாடுகிறாள். காதலிக்கும் எவருக்கும் தெரிந்த விஷயம் இது. பெண்ணின் மாய்மாலம் என்று சொல்வது இதைத்தான். பொம்புளை மனசு ஆழம் என்று சொல்வது இதைத்தான்

கொற்றவை மாதிரி ராதை கண்ணன் தலைக்குமேல் காலைத்தூக்கும் இடத்தை வாசித்து உறைந்து போனேன். அது எப்போதுமே நிகழ்வது. அங்கே அப்படி மேலெழுந்து தலையில் கால்வைக்காமல் ஒரு பெண் அடங்கமாட்டாள். அதன்பின்னர் காலடியில் கிடப்பாள்

நான் ஒரு காலகட்டத்தில் அந்த ஊசலிலே ஆடியிருக்கிறேன். அப்படி காலெடுத்து சூடியிருக்கிறேன். அந்த உக்கிரமான நினைவுளில் சென்று பெருமூச்சுவிட்டு மீண்டு வந்தேன்

சண்முகம்