Thursday, January 1, 2015

சொல் எனும் ஆயுதம்





[வாக்தேவி]


ஆம், என்று படைக்கலத் திறனுக்கு சொல்திறன் மாற்றாகிறதோ அன்றுதான் மானுடம் பண்படுகிறது என்பேன்” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் ‘படைக்கலங்களுக்கு ஒற்றை இலக்கும் ஒரேபொருளும் அல்லவா?’ என்று எண்ணிக்கொண்டான்.

படைகலன்கள் எதிர் தரப்பை அழித்தொழிப்பது. அதுவே அதன் ஒரே இலக்கு. அழித்தொழிப்பதன் மூலம் அது வென்றவனின் எண்ணங்களை அங்கு நிலைநாட்டுகிறது.

ஆனால் சொல் திறன் எதை அழிக்கிறது? அது எதையும் அழிப்பதில்லை அது மாற்றி அமைக்கிறது அல்லது கட்டுபடுத்துகிறது. சொல்லின் இலக்கு எது? சொல்லின் இலக்கு பொருளா? எனக்கு அப்படி தோன்றவில்லை. பொருளில் இருந்து உருவாவதே சொல். பொருளை சுமந்து செல்லும் ஒரு ஊடகமே சொல். அந்த வகையில் சொல் என்பது ஒரு அம்பு.

சொல்லும் இலக்கை அடைகிறது. ஆனால் அது எதை இலக்காக்குகிறது? தர்மன் விதுரரிடம் சொல் திறனை கற்றால் அது எதிராளியின் சொல் திறனை இலக்காக்கும் சொல்லை தான் கற்ப்பான். அங்கு எதிராளியின் சொல் திறன் எனும் வில்லை உடைப்பதே இலக்காகும். அவர்கள் மேற்கொண்டு சொல் தொடுக்க முடியாமல் செய்வதே அங்கு வெற்றியாகும்.

இன்னொன்று எதிராளியின் மனசாட்சியை இலக்காக்குவது. அறத்தை சொல்லில் ஏற்றி எதிராளியின் மனசாட்சியை நோக்கி எய்வதே பன்பட்ட சொல் திறன். அதுவே உன்மையான வெற்றியை தேடி தரும் அதுவே மனித குலத்தை பன்படுத்தும். ஆனால் அது ஒரு இலட்சிய கனவு. இந்த சொல் திறனை கற்பானா தருமன்? யாரிடமிருந்து?



ஹரீஷ்