Monday, December 28, 2015

தாழொலிக்கதவுகள் – 1



 “ஆம், ஆணவம் கொண்டவர், ஐயமே இல்லை… இம்மண்ணில் ஆணவம் என்று ஒன்று தான் வாழ உகந்த இடம் தேடி அலைந்து அவரை கண்டு கொண்டது. அவரன்றி ஆணவம் அமரும் அரியணை பிறிதேது உள்ளது இப்புவியில்?” 

எனக்கு நிகர் எவனுமில்லை என கொக்கரிப்பது ஒரு வகை ஆணவம் எனில், உருவால்,சொல்லால், செயலால், நடத்தையால் ஒவ்வொரு கனம்மும் இவனுக்கு நிகர் எவனும் இல்லை என உணர்வதன் வழியே சராசரி மனம் உருவகிக்கும் ஆணவம் அது ஆணவத்தைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு அழுத்தம் கூடியது.

காதல் கொண்ட கன்னியர் உள்ளம் இந்த கீள்மைக்கு முன் கொள்ளும் சீற்றம் அழகு. உன்மத்தம் கொண்ட அவர்களின் விழிகளுக்கு மட்டுமே கவச குண்டலதாரியாக கர்ணன் தெரிவது பேரழகு.

நீலனின் சொற்றொடர் ஒன்றுன்ன்டு ''எளிய மனங்களின் வஞ்சம்'' அதில் ஒவ்வொரு கணமும் பிரதி பலிக்கிறான்ராதேயன். எவ்வளவு சருகுகளை போட்டாலும் அக்னி அவிந்து விடுமா என்ன? அவற்றையே அவிசெனக் கொண்டு எழுந்து படர்கிறான் வெய்யோன்.

கண்ணீர் வழிய கால்தளர்ந்து மண்ணில் அமர்ந்து நெஞ்சை கையால் அழுத்தி “இப்புவி ஒருபோதும் மாமனிதரை அறியமுடியாது. மானுட உள்ளங்களை மூடியிருக்கும் திரை அது. முடிவற்றவை அனைத்தையும் தங்கள் சிறுவிரல்களால் மட்டுமே எண்ணி எண்ணி அளக்க வேண்டுமென்ற இழிவை இங்குள ஒவ்வொருவர் மேலும் சுமத்திய படைப்புத் தெய்வம் எது? மானுடரே, சிறியோரே, ஒவ்வொரு முறையும் நாம் ஏன் தோற்கிறோம்? ஒவ்வொரு முறையும் பெருந்திரளெனப் பொருளழிந்து நாம் ஏன் இழிவை சூடிக் கொள்கிறோம்?” என்றான் சூதன்.
அவன் குரல் மூதாதையர் உறங்கும் காட்டிலிருந்து எழுந்த தொல்தெய்வமொன்றின் குரலென அந்தத் தெருநடுவே ஒலித்தது. “தெய்வங்களே! மாறாச்சிறுமையை மானுடம் மீது சுமத்தினீர்கள். அதைப்பார்க்கும் விழிகளை என் முகத்தில் அமைத்தீர்கள். கருணையற்றவர்கள் நீங்கள். சற்றும் கருணையற்றவர்கள்.” கைவிரித்துக் கதறி உடல் வளைத்து தெருப்புழுதியில் ஒருக்களித்து விழுந்து உடல்குறுக்கி அவன் அழத்தொடங்கினான்.
என்ன சொல்ல பிறவி அந்தகனுக்கு சூரியன் என்னவாக பொருள்படுமோ அப்படித்தான் மாமனிதர்கள் சராசரி மானுட மனத்துக்கு பொருள்படுகிரார்கள்.  

கடலூர் சீனு