Tuesday, December 15, 2015

ஆதிபர்வம்



ஜெ

மகாபாரதத்தின் ஆதிபர்வமே இன்னமும் வெண்முரசில் முடியவில்லை. முக்கியமான நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமேல்தான் இருக்கின்றன. அப்படியென்றால் வெண்முரசு எத்தனைபெரியதாக இருக்கும் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது

அதேசமயம் கதை கண்டபடி வளர்த்தப்படவுமில்லை. பல கதைகள் ரத்தினச்சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. அதை யோசிக்கும்போது வெண்முரசின் செறிவு மட்டும் அல்ல மகாபாரதத்தின் செறிவேகூட ஆச்சரியப்படவைக்கிறது


 சுந்தரம் மகாதேவன்

அன்புள்ள சுந்தரம்

வெண்முரசில் மகாபாரதத்தின் பிற பகுதிகளில் வரும் பல கதைகள் ஏற்கனவே உள்ளே வந்துவிட்டன. ஆகவே நாவல் ஆதிபர்வத்தை கடந்துவிட்டது என்பதே உண்மை

ஜெ