Friday, December 25, 2015

வலியின் மைந்தன்



ஜெ,

வெண்முரசின் வரிசையில் வெய்யோன் புதிய வீறுடன் எழுந்திருக்கிறது. பரசுராமனின் கதை, அலர்க்கனின் கதை, கர்ணனின் கதை என மூன்றுமே மூன்று திசைகளில் விரிந்து ஓர் உலகை உருவாக்கிக்காட்டின

அலர்க்கனின் கதை இதற்கு முன்னால் வந்த புலோமை போன்றவர்களின் கதைகளுடன் நுட்பமாக பின்னியிருக்கிறது. கியாதி, புலோமை, ரேணுகா மூன்றுபேருமே ஒரே வகையான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். மூவருமே பிருகுகுலத்தவர்கள். அதை பரசுராமர் சொல்லவும் செய்கிறார்

ஆழமான நுணுக்கமான இணைப்புகள் வழியாக இந்தக்கதையை உருவாக்கிச்செல்கிறீர்கள் ஜெ. எஞ்சி நிற்பதென்னவோ கர்ணனில் அழியாமலிருந்துகொண்டிருக்கும் அந்த வலி மட்டும்தான் என நினைக்கிறேன்

ஜெயராமன்