Sunday, December 20, 2015

இருமுகம்



ஜெ சார்

வெய்யோனுக்காகக் காத்திருக்கிறேன். கர்ணனைப்பற்றி நீங்கள் எழுதும்நாளை நானும் எண் நண்பர்களும் எதிர்பார்த்திருந்தோம். கர்ணனை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் பிறர் சகமனிதர்களிடம் போராடினார்கள். கர்ணம் அதற்குப்பதிலாக அவனுடைய விதியுடன் போராடினான். அவன் அடைந்த இழிவுகளை எல்லாரும் எங்கோ கொஞ்சம் அடைந்திருப்பார்கள் இல்லையா?

கர்ணனை நீங்கள் இதுவரை கொண்டுவந்து சேர்த்ததே ஆழமான ஒரு சித்தரிப்பு. சூரியனின் மகனாகவும் சூதன்மகனாகவும் ஒரேசமயம் இருந்துகொண்டிருக்கிறான். இனிவரும் நாவலில் எப்படி வளரப்போகிறான் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்

செல்வராஜ்