Monday, December 7, 2015

அர்ஜுனி



ஜெ



காண்டீபம் முடியும்போது வெறும் விஷுவல்கள்தான் முதலில் மிச்சமிருந்தன. அர்ஜுனனின் பெண்வேடம் சித்ராங்கதை உலூபி வாழும் சிதல்புற்றுக்காடு என பல விஷயங்கள். அதன்பின்னர் ஒவ்வொன்றாக மனசில் தொகுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். அற்புதமாக வந்தது.

சித்ராங்கதைக்கும் அர்ஜுனனுக்குமான பால் மாறுபாடும் அதன் சரசங்களும் அதன் ஸ்பிரிச்சுவல் தளங்களும்தான் இந்நாவலின் உச்சங்கள் என்று மொத்தமாகப்பார்க்கும்போது நினைக்கத்தோன்றுகிறது. ஆண் பெண் என்னும் பேதம் அழிந்து காமம் மட்டும் மிச்சமிருக்கிறது. அதை அந்தக்குறியீட்டுக்கதை வழியாகச் சொல்லியிருந்தது அற்புதமாக இருந்தது.


ஆரம்பம் முதலே அர்ஜுனன் நெகிழ்வுத்தன்மைகொள்ள ஆரம்பித்துவிட்டான். முதலில் உடல் நெகிழ்கிறது. பெண்ணாகி உணர்ச்சிகள் நெகிழ்கின்றன. கடைசியில் நேமியின் அருகே ஸ்பிரிச்சுவலாகவும் நெகிழ்ந்துவிடுகிறான்

ரகுராம்