Tuesday, December 8, 2015

அர்ஜுனனின் சரிவும் எழுச்சியும்



அன்புள்ள ஜெ

கடைசியில் அர்ஜுனன் கொஞ்சம் அணைந்துபோனதுபோல இருக்கிறது. வில் விஜயன் மாங்காய் பறிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் உங்கள் நோக்கம் என்ன என்பதும் கூடவே புரிகிறது. அவன் இத்தனை அடங்கி அகிம்சையை நோக்கிப்போனபிறகு என்ன நடந்து அப்படி சீறி காண்டீபத்தை எடுத்து வஞ்சின ம் உரைத்தான்? அது பாஞ்சலிக்கு நடந்த கொடுமையைக் கண்டபின்னர்தானே?

அதுவரைக்கும் அவனைக்கொண்டுபோய் ஒரு ஹைட்டை உருவாக்க இந்த அணைதலை பயன்படுத்துகிறீர்கள் என்றும் இது ஒரு உத்திதான் என்றும் நினைத்துக்கொள்கிறேன். எப்படி நேமி திரும்பி வந்தாரோ அதேபோல ஒரு சின்னசரிவுதான் இது.

விஜயகுமார்