Thursday, December 31, 2015

அரசர் எண்ணாததை எண்ணற்க



ஐயா,

கர்ணன் அவையில் அமைச்சர் , அரசர் சொல்லாததை அமைச்சர் முன்னெடுக்கக் கூடாது என்கிறார் இன்றைய கார்பரேட் உலகில்
நடுநிலை மேலாளர்களாக இன்று இருப்போர் அமைச்சர் நிலையில் உள்ளனர். நாமாக ஒரு நவீனக் கருத்தை முன் மொழிந்தால், உயர்நிலை மேலாளர்கள் மெல்லிய நகையுடனோ சொல்லற்ற நிராகரிப்புடனோ தாண்டிச் செல்வதைப் பார்க்கிறோம்.

அர்த்த சாஸ்திரத்திலும் குறளிலும் இது தொடர்பான குறிப்புகள் உண்டா என தயவுடன் தெரிவிக்கவும்
கர்ணன் அனைத்துக் குடிகளுக்குமிடம் அளிக்கும் இடம் கண்ணீரை வரவழைப்பது
எனது வாசகர்கள் எதிர்காலத்தில் வருவர் என்று நிகழ்கால வாசகர்களுக்கு சவால் விடும்போது
மாணவனுக்கு சிரமத்துடன் ஈகோவை தூண்டி கணக்கு கற்பிக்க முயலும் நல்லாசிரியனின் தொய்வைக் காண்கிறோம்
நாமும் உம்முடன் ஓடி வருவோம்
விழுந்தால் மீண்டும் பின்னாலாவது வருவோம்


அன்புடன்
ஆர் ராகவேந்திரன்