Friday, December 11, 2015

எட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்



அன்புள்ள ஜெ


கிருஷ்ணனின் துணைவியரைப்பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சத்யபாமா ருக்மிணிபோராட்டம் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ராதையைப்பற்றியும் அறிந்திருக்கிறேன். இந்திரநீலத்தில் அத்தனை நாயகியரையும் வரிசையாக  அறிமுகம் செய்யும் இந்திரநீலம் அற்புதமாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் ராதைகள் என நினைக்கத்தோன்றியது. அஷ்டபார்யாக்களும் அஷ்டநாயகிபாவங்களாக ராதையிடமே இருக்கிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் எடு பாவங்களில் ராதையாக இருக்கிறார்கள்
ரகுநாதன்