Monday, December 14, 2015

மகாபாரதப்பெண்களின் இடம்




ஜெ

மகாபாரதத்தின் பெண்களைப்பற்றி பல கடிதங்கள் வந்திருக்கின்றன. உண்மையில் வியாசர் இந்தப்பெண்களை பெரியதாக விரிவாக்கம் செய்து எழுதவில்லை. நீங்கள் குறிப்புகளைக்கொண்டு விரிவு செய்கிறீர்கள். அவர்களுக்கு பெரிய ரோல் ஏதும் இல்லை. அதை பெரியதாக்க நீங்கள் முயலவேண்டும்.

இப்படி மகாபாரதத்தின் அரசியலிலும் பூசல்களிலும் பங்குபெறாத பெண்களை விரிவாக்கி எழுதுவது பெரிய சவால். திரும்பத்திரும்ப அவர்களுக்கு ஒரே ரோல்தான். அவர்களை மன்னர்கள் கவர்ந்துவருகிறர்க்ள். அவர்கள் மன்னர்களிடம் காதல்கொள்கிறார்கள்

ஆனால் இந்த டெம்ப்ளேட்டுக்குள் நீங்கள் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு வகையிலே காட்டுகிறீர்கள். அந்த நுட்பம் ஆச்சரியமானது. ஒரு பெண்போல இன்னொருத்தி இல்லை. உதாரணமாக சுபத்திரை துச்சலை இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள். ஆனால் குணச்சித்திரம் சுத்தமாக வேறு வேறு

சாரங்கன்