Saturday, December 26, 2015

வருகை

 
 
வணக்கம் சார்,

இன்று, வெய்யோன் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை...கர்ணன் கதாபாத்திரம் என்னை ஆழமாகப் பாதித்த ஒரு படைப்பு.
இன்று அவனின் கதை துவங்குவதில் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்றுத்தான் நானும் என் மனைவியும் வெண்முரசில் ஓவியம் விடுபட்டு போனதைப் பற்றி வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.
(இன்றும் எனக்கு பீஷ்மர் என்றாலே அம்பையை படகிலே கொண்டு செல்லும் போது கைகட்டி நிற்பாரே, அந்த உருவம் தான் நினைவுக்கு வரும்). வெய்யோனை சண்முகவேலின் ஒவியத்தோடு பார்த்தபின் கண்கள் குளமாகி விட்டது.

மிகையாக இல்லை...  சத்தியமாக சொல்கிறேன்...
இத்தருணத்திற்கு நான் முற்பிறவியில் என்ன தவம் செய்தேனோ ?

அன்புடன்,
இராவணன்.
( மலேசியா ).