Friday, December 18, 2015

வெய்யோன்



அன்புடன்  ஆசிரியருக்கு

                     என்  நண்பர்  பிரபு  வெண்முரசு  படித்தது  கிடையாது.  நேரடியாக  வெண்முரசு  படிக்க  அவருக்கு  நாட்கள்  தேவைப்படலாம். ஆனால்  கர்ணனை  ஏனோ மிக  விரும்புவார்.  வண்ணக்கடலிலும்  பிரயாகையிலும்  கர்ணன்  குறித்து  என் மனம்  உருவாக்கியிருந்தத சித்திரத்தை  அவருக்கு  கூறினேன்.  கண்ணனையும்  பார்த்தனையும்  கர்ணனெனுக்கென்று  தனி நூல்  எழுதுவீர்களா  என்று  ஐயப்பட்டுக்  கொண்டே  இருப்பார்.  ஆனால்  வெய்யோன்  அறிவிப்பை  பார்த்ததும்  அதே  ஐயம்  எனக்குள்ளும் இருந்து  வந்ததை  உணர்கிறேன்.இனி  அடிக்கடி  கடிதம்  எழுதி  தொல்லை கொடுக்கமாட்டேன் . என்  மனவெழுச்சியை பதிவு  செய்ததற்கு  நன்றி.

அன்புடன்
சுரேஷ் பன்னீர்செல்வம்