அன்புள்ள ஜெயமோகன் சார்,
15 நாட்கள் பீகாரில் 
உள்ள எங்கள் ஆஷ்ரமத்திற்கு ஒரு பயிற்ச்சிக்காக செல்கிறேன். இந்த ஆஷ்ரம் 
அமைந்த்திருக்கும் குன்றுக்கு" கர்ண சௌரா" என்று பெயர். இந்த பகுதி கர்ணன் 
ஆண்ட பகுதியாகவும், கங்கை வளைந்து செல்லும் இந்த குன்றின் மேல் உள்ள 
காளிக்கு தினமும் , தன் உதிரத்தால் பலிகொடை கொடுத்து , வரமாக அன்று இரவே, 
தன் எடைக்கு எடை தங்கம் பெற்று அதை வருபவர்கள் அனைவருக்கும் கர்ணன் தானம் 
செய்ததாக ஐதீகம் .
 இந்த குன்றை தான், சுவாமி சத்யானந்தர் வாங்கி இப்போது 
இருக்கும் ஆஷ்ரமத்தையும்,ஒரு குருகுல, யோகா, பல்கலை கழகத்தையும் 
நிறுவியுள்ளார். கர்ணன் காலத்தில் மக்களுக்கு பொன்னும் பொருளும் தேவைக்கு 
கொடுக்கப்பட்டது  இன்றைய மக்களுக்கு அமைதியும், ஆரோக்கியமும் தேவை 
இருப்பதால்,இங்கிருந்து அதற்கான பயிற்சி வாரி வாரி வழங்கப்படும் என்பது 
சுவாமிஜியின் கருத்து. 
உங்கள் பணியும் சற்றும் குறையாத,வாரி வாரி வழங்கும் கொடை அன்றி பிறிதில்லை.
இந்த
 நல்ல தருணத்தில் வெய்யோன்  என்னுடன் பயணம் முழுவதும் இருக்கப்போகிறான். 
நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இந்த கதை பகிரப்படும் போனமுறை ஆஷ்ரம் 
சென்ற பொது மழைப்பாடல் வரை கதை சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த முறை வெய்யோன்
 வரை தொடரலாம். 
போய் வருகிறேன்.
சௌந்தர்

