அன்புள்ள  ஆசானுக்கு , 
         இன்று  மாமலர்  வாசித்துக்கொண்டு  இருக்கையில்  இவ்வரி என்னை கிளர்ச்சி கொள்ள  வைத்தது. 
   " மண்ணில் பலவகையான காதல்கள் மானுடருக்கு நிகழ்கின்றன.கன்னிமேல் இளைஞர் கொள்ளும் காதல் , மைந்தர்மேல் பெற்றோர் கொள்ளும் காதல் , தோழர்கள் கொள்ளும் காதல் .. ஆனால் ஆசிரியனின் மேல்  மாணவன் கொள்ளும் காதல் இவையனைத்திலும் முதன்மையானது.பிற காதல்கள் சுடர்கள் என்றால் ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள காதலை சூரியன் எனலாம்." 
   " ஏனென்றால் விழைவின்பொருட்டும் வெல்வதன்பொருட்டும்  கொள்ளும் காதல்கள் விரைவிலேயே சலித்து பொருளிழக்கும்.எல்லையின்றி வெல்லவும் விழையவும் எவரால் இயலும்? . கற்றலோ எல்லயற்றது."
  உங்களை ஆசிரியராக  கொண்ட  பல நூறு  பேர்களிள்  நானும்  ஒருவன். உங்களுக்கு  ஆசிரியர் தின  வாழ்த்துக்கள் . 
சுகதேவ் .
மேட்டூர். 

