Friday, September 28, 2018

இடும்பவனத்தின் கதை




ஜெ

மிகச்சுருக்கமாகச் சொல்லப்பட்டாலும் இடும்பவனத்தின் மாறுதல் ஒரு பெரிய வரலாறாக அமைந்தது. அந்த வரலாற்றின் தொடக்கம் என்பது அந்த ஆள்நுழையாக் கொடுங்காட்டுக்குள் வேறுவழியே இல்லாமல் பீமன் நுழைவது. அவன் இடும்பனைக்கொன்றான். இடும்பியை மணந்தான். இன்றைக்கு இடும்பவனம் ஒரு பெரிய நகரமாக மாறியிருக்கிறது. இன்னும் சிலதலைமுறைக்குள் அது அரசகுடியாக ஆகிவிடும். அந்த மாற்றம் தொடர்ச்சியாக இங்கே நடந்துகொண்டே இருந்தது. அதுதான் இந்தியாவின் வரலாறு. அதை முதற்கனல் முதல் மீண்டும் மீண்டும் வெண்முரசிலே காணமுடிகிறது

ராஜ்