Sunday, September 30, 2018

பீமனும் கடோத்கஜனும்



அன்புள்ள ஆசிரியருக்கு,
     
இன்றைய (26.9.18)வெண்முரசில்      கடோத்கஜனை பல வருடங்களுக்குப் பிறகு    பார்க்கும்போது  பீமன் அமைதியாக இருப்பது, அரவானை பார்த்தபோது அர்ஜுனன் இருந்த மனநிலையை நினைவுபடுத்தியது.பீமனுக்கு மிகவும் பிரியமானவன் அல்லவா கடோத்கஜன்.போருக்கு வராமல் இருந்திருக்கலாம் என்றே தந்தையின் உள்ளம் எண்ணும். தீபத்தை நோக்கி விட்டில்கள் என இளையவர்கள் அனைவரும் குருசேத்திரத்தை அடைந்துவிட்டார்கள்.
               
             கா.சிவா