Thursday, September 27, 2018

படிநிலைகள்



அன்புள்ள ஜெ

அசங்கன் போரை எதிர்கொள்வதில் உள்ள நுட்பமான படிநிலைகள் ஆச்சரியமானவை. அவன் முதலில் போரை கற்பனையாகவே அடைகிறான். அதன்பின்னர் அது செவிக்கு மட்டும் தெரிவதாக நிகழ்கிறது. அவனுடைய கனவில் அது நிகழ்கிறது. அதன்பிறகுதான் அது யதார்த்தமாக ஆகிறது. ஒவ்வொரு போரும் ஒவ்வொரு வகையாக உள்ளது. கற்பனைப்போர் ஒரு பெரிய கிளர்ச்சியை அளிக்கும் எதிர்பார்ப்பு, கனவில் கண்டபோர் பெரிய ஒரு வதை. நிஜப்போர் ஓர் யதார்த்தம். கிளர்ச்சியும் இல்லை பெரிய பயங்கரமும் இல்லை. அவன் அதை சாதாரணமாகவே எதிர்கொள்ளமுடிகிறது

ஆர்.கிருஷ்ணா