Sunday, September 16, 2018

கடோத்கஜன்





அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலம். வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். நடுவே விட்டுவிட்டது. இப்போதுதான் நான் வெண்முகில்நகரத்துக்கே வந்துகொண்டிருக்கிறேன். அபத்தமாக இருக்கலாம். கூடவே இப்போது திசைதேர்வெள்ளத்தையும் வாசிக்கிறேன். இப்படி வாசிக்காதே என்று என் மனைவி சொன்னாள். ஆனாலும் வாசிக்கிறேன். ஏனென்றால் என்னுடைய ஆர்வத்தைத் தடுக்கமுடியவில்லை. இதுவரை இந்நாவலில் கடோத்கஜன் வரவில்லை என்று நினைத்தேன். ஏனென்றால் பிரயாகை நாவலில் என் மனம் கவர்ந்த கதாபாத்திரம் கடோத்கஜன்தான்.அவனுடைய அன்பும் கள்ளமில்லாத குழந்தைத்தன்மையும் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது

செல்வக்குமார்