Thursday, September 13, 2018

தெய்வம்தோன்றல்



ஜெ

ஜலன் உணரும் குழம்பிய மனநிலை ஆச்சரியமூட்டும் பல வரிகளால் ஆனது. அவன் உயிரோடிருக்கிறான் என்பதற்கு ஆதாரத்தை இன்னொருவர்தான் அளிக்கமுடியும். ஆகவேதான்

இறக்கவில்லை என எவ்வாறு உணர்வது? தன்னை உயிருடன் இருப்பதாக உணர்வதற்கு பிறர் தேவைப்படுகிறார்கள் என்னும் விந்தையால் அவன் உளநிலைப்பு அடைந்தான். அவ்வண்ணமென்றால் உயிரோடிருப்பது என்பதே பிறர் அளிக்கும் நிலைதானா? 

என்று அவன் குழப்பம் அடைகிறான். அதற்குப்பதிலாக அவன் கண்டடைகிறான். தன்னிருப்பென்பது காலமும் இடமும் கடந்தது. தான் மட்டுமே அறிந்தது. அந்தக் குழப்பநிலையே அவனை அங்கே நிகழும் அந்த தெய்வங்களின் போரைக் காணவைக்கிறது. அவன் உடலுக்குள் இல்லை. ஆகவே காலமும் இடமும் இல்லை. ஆகவே காலமும் இடமும் இல்லாத தெய்வங்களை அவனால் காணமுடிகிறது

செல்வன்