Tuesday, September 25, 2018

எல்லைகள்



அன்புள்ள ஜெமோ ,
   
பீஷ்மருக்கென்ற இருக்கின்ற எல்லைகளில் ஒன்றை தான்ட முடிவெடுத்து ஒரு மூத்தவனை இழந்துள்ளார். கடைசி எல்லை சிகண்டியா ?.... அதனை எண்ணி பரபரக்கிறது மனம். மற்ற எல்லைகளை காண காத்துள்ளேன்.
   

 பீமனின் எல்லை மீறுதல் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. போரில் பீமனின் முதன்மையான பணி அதுவே என எண்ணுகிறேன்.அபிமன்யூவின் நிலை கூட்டுப் புழு நிலையிலிருந்து பறந்து எழும் பட்டாம்பூச்சியின் நிலை என உணர்கிறேன். வரையறைகளை மீறும் போக்கினாலேயே புகழ் கொண்டவனாகிறான் அபிமன்யூ.
 

அன்புடன்
தே. குமரன்
தருமபுரி