Friday, September 28, 2018

காவல்




ஜெ

அசங்கன் காவல்மேடையில் காத்திருப்பதைப்பற்றிய பகுதியை தனியாக வெட்டி சேமித்து வைத்து வாசித்தேன். இத்தகைய கதையோட்டத்தில் அதெல்லாம் அப்படியே கவனிக்காமல் போய்விடுவதற்குத்தான் வாய்ப்பு. அவன் கூர்ந்து கவனிக்கக்கூடாது, மூளை களைப்படையும். கவனிக்காமலும் இருக்கக்கூடாது. அனிச்சையாகக் கவனிக்கவேண்டும். அப்போதுதான் சிறந்த காவல் அமையும். அவன் கற்றுக்கொள்ளும் அந்தப்பாடமும் அங்கே அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அழகானவை. பொதுவாக வெண்முரசில் குதிரைவளர்ப்போ காவல்வேலையோ அதில் ஈடுபடுபவர்கள் அதன் நுட்பங்களை நன்கறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்

ராஜசேகர்.எம்