Sunday, September 23, 2018

போரை வாசிப்பது



ஜெ

இந்த வாசகர்கடிதங்களை வாசிக்கும்போது பலர் பழைய நாவல்களையும் கூடவே வாசிப்பதாகத் தெரிகிறது. அது இமோஷனலாக இன்றைக்குத் தேவையாகிறது. கூடவே இன்றைக்குள்ள போரின் மனநிலைகளின் மீது பலவகையானத் திறப்புகளையும் அது உருவாக்குகிறது.

ஒவ்வொருநாளும் நான் திசைதேர்வெள்ளத்தின் போர்க்காட்சிகளை வாசிக்கிறேன். கூடவே கொஞ்சம் பழைய இனிமையான நாவல்களையும் வாசிக்கிறேன். நீலம் மிகச்சிறந்த ஒரு அனுபவம். ஆனால் அதைவிட பிரயாகை, வெண்முகில்நகரம் பகுதிகள் சிறந்தவை. பூரிசிரவஸ் மலைமேல் போய் மனைவியை அடையும் இடம் போன்றவை மிகச்சிறப்பானவை. நான் தொடர்ச்சியாக இவற்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன்

எஸ்.ராஜன்