Sunday, September 23, 2018

வெண்முரசின் கற்பனைகள்



ஜெ

வெண்முரசின் கற்பனைகள் எப்போதுமே நம்முடைய எண்ணங்களைக் கடந்துசெல்பவை. இப்போது போர்க்களத்திலும் அந்தக்கொந்தளிப்பைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் போர்க்கள க்காட்சியின் வர்ணனைகளிலேயே உக்கிரமானது போர்க்களத்தில் செத்தபின்னரும் அதே விசையுடன் அதே களத்தில் போரிடுகின்றன ஆவிகள் என்பதுதான். அந்த மனம் கொண்ட வெறி ஆறுவதில்லை. உடல் செத்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மா வெறிகொண்டு சண்டைபோடுகிறது. பூமியில் போலவே சூட்சுமமகாக வானத்திலும்  போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

சக்திவேல்