Thursday, September 27, 2018

அசங்கன் கண்ட போர்



அன்புள்ள ஜெ

அசங்கன் முதலில் என் ஞாபகத்துக்கே வரவில்லை. வந்ததும் ஒரு பெரிய திகைப்பு ஏற்பட்டது. உலகமே தெரியாத ஓர் இளைஞன் போரை எப்படிப்புரிந்துகொள்வான்? போர் என்பது ஒரு பெரிய வெறியாட்டம். அதை இவன் எப்படி புரிந்துகொள்வான்? அசங்கன் காவலில் இருந்து தொடங்கி மெல்லமெல்ல போரை அதன் உக்கிரத்துடன் எதிர்கொள்வது அபாரமான மனப்பதிவு. போர் முன்புறம் நிகழ்கிறது என நினைக்கிறோம். ஆனால் அதன் அதிர்வு பின்புறத்தில்தான் தெரியவரும். அந்த அதிர்வைத்தான் அசங்கன் வழியாகப் பார்க்கிறோம். அசங்கன் போரின் ஓசைகளை மட்டுமே முதலில் காண்கிறான். அதுவே அவனை கொந்தளிப்படையச்செய்கிறது. போதையில் மறந்துதான் தூங்க முடிகிறது. போர் என்பதை அவன் ஒரு அம்புகூட எய்யாமல் ஒரு முறைகூட மரணத்தைப்பார்க்காமல் பின்னாலிருந்தே அனுபவித்துவிட்டான்

மகேஷ்