Tuesday, September 11, 2018

திசைதேர்வெள்ளம்




அன்புள்ள ஜெ

செந்நா வேங்கை ஓர் உச்சத்தை அடைந்து நின்றது. அந்த உச்சத்திலிருந்தே திசைதேர் வெள்ளத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். போர்க்களத்தின் நாற்றம் மாறிக்கொண்டே வருவதை ஜலன் உணரும் இடம் ஒரு க்ரூரமான அனுபவத்தை அளித்தது. அங்கே அம்பை வந்து நின்று அலறும் இடம் மிகப்பெரிய கிளாசிக் டிராஜடி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் உணர்ச்சியை உருவாக்கியது. நான் அம்பையில்தான் ஆரம்பிக்கும் என நினைத்தேன். ஏனென்றால் இது பீஷ்மரின் கதை அல்லவா?

ஜெயராமன்