Sunday, September 30, 2018

கடோத்கஜனின் உருவம்




அன்புள்ள ஜெ

கடோத்கஜனின் உருவமும் அவன் படைகளின் தனிச்சிறப்பும் ஒரு மேஜிக்கலான தன்மையுடன் இருந்தன. மூலக்கதையிலேயே அவர்கள் பறக்கும் ஆற்றல்கொண்ட படைவீரர்கள் என்பது உண்டு. அதை இப்போது ஒரு ரியாலிட்டியாகச் சொல்லியிருந்தீர்கள். அவர்களின் கால்களின் அமைப்பு பிரயாகையிலேயே வந்துவிட்டது. இடும்பனை அந்தக்காலின் பலவீனத்தை வைத்துத்தான் பீமன் கொல்கிறான். கடோத்கஜனின் அன்பும் பெருந்தன்மையும் மனநிறைவை அளிப்பவையாக இருந்தன. அற்புதமான கதாபாத்திரம் அவன்

ஜெயராஜ்