Friday, September 28, 2018

கடோத்கஜனின் வருகை




ஜெ

யுதிஷ்டிரனும் தம்பியரும் கடோத்கஜனை வரவேற்கும் காட்சி அற்புதமானது. அதே காட்சி முன்பு பிரயாகையில் வந்திருக்கிறது.  தருமனின் கால்களைத் தொட்டு வணங்கினான். “அழியாப்புகழுடன் இரு மைந்தா” என்றான் தருமன். “காடுறைத் தெய்வம் என்று கேட்டிருக்கிறேன். உன் வடிவில் பார்த்தேன். என்றும் உன் அன்பு என் குடிக்குத் தேவை.”  என்று யுதிஷ்டிரர் அன்று கடோத்கஜனிடம் சொன்னார். கடோத்கஜன் நகுலனையும் சகாதேவனையும் தூக்கி எறிந்து பிடித்து விளையாடினான். குந்தியை தோளிலேற்றி விளையாடினான். அப்போது அவன் மிகவும் சிறுவன். அந்தக்காட்சியை இப்போதும் மறக்கமுடியவில்லை

சுவாமி


‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64