Thursday, September 27, 2018

கடோத்கஜன்



ஜெ

கடோத்கஜனின் அறிமுகம் அருமையாக உள்ளது. கடோத்கஜன் பிரயாகை நாவலில் அறிமுகமானவன். அதன்பின் இப்போதுதான் வருகிறான். அவனுடைய கதாபாத்திரம் அந்த அடிப்படை இயல்பு கொஞ்சம்கூட மாறாமல் ஆனால் விரிவடைந்துள்ளது. இன்று அவன் இடும்பவனத்தின் அரசன். அந்த உற்சாகமான பேச்சும் தாவிச்செல்லும் நடையும் அற்புதமானவை. அவன் அனுமனின் கதையைக்கேட்டு பீமனிடம் அவனும் சூரியனை நோக்கி செல்ல விரும்பியதை வாசித்த நினைவு வந்தபோது புன்னகைதான் வந்தது. அற்புதமான கதாபாத்திரம். போர்க்களத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அவன் அறிமுகமாகாமல் இப்படி ஒரு  ஹிரோ எண்ட்ரி அமைந்ததில் மகிழ்ச்சி

சந்திரகுமார்