Friday, September 28, 2018

துயர்



ஜெ

இன்று வந்த அத்தியாயத்தில் இந்த வரிகள் மனதைப் பிசைந்தன


மானுடருடன் கலந்து அரைமானுடராகவே ஆகிவிட்டிருந்தாலும்கூட புரவிகளின் விழிகளில் தனிமையும் துயரும் நிறைந்திருக்கும். யானைவிழிகளுக்குள் அத்துயர் மிகமிக ஆழத்திலென மின்னிக்கொண்டிருக்கும்.

விலங்குகளின் கண்களை அண்மையில் பார்ப்பதைப்பற்றி நீங்கள் முன்னரும் எழுதியிருக்கிறீர்கள். அது ஒரு அகவயமான உணர்வுதான். ஆனாலும் மனம் அதில் ஈடுபட முடிந்தது

ராஜ்