Wednesday, September 26, 2018

கிருஷ்ணனின் உக்கிரம்



அன்புள்ள ஜெ

வாசகர் மனோகர் எழுதிய வரி: "ஏனென்றால் சததன்வா செய்தவற்றை எல்லாம் இவர்கள் அனைவருமே செய்யக்கூடியவர்கள்தான்". சமூக உளவியலில் மட்டுமல்ல, வைணவ தத்துவத்திலும் இது மிக உண்மை அல்லவா ? சததன்வாவும் கிருதவர்மனும் தண்டிக்கப்பட்டார்கள், சாத்யகியும் அக்ரூரரும் ஏற்றுக்கொள்ளப்பட்டர்கள்.  வெண்முரசில் போருக்கு முந்தைய இரவில் கிருஷ்ணன் எதிர் முகாமை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி ஒரு உன்னத சித்திரம், எதிர்காலத்தில் நல்ல ஓவியர்கள் அதை வரைவார்கள்.

இன்றைக்கு மரபான ஸ்ரீவைணவத்தில் தயவு சற்றும் அற்றவனாக பெருமாள் சொல்லப்படுவதில்லை. 'மது கைடபர் என்ற எதிரிகளுக்கும் அருளும் சமஸ்த ஜகன்மாதாவாக' ஸ்ரீயே முன்னணி கொள்கிறாள். நீங்கள் சொல்வதுபோல ஐயனார்களும் காளிகளும் 'அருள்மிகு'வான கதை போல தோன்றுகிறது.

வைணவக் கோயில்களில் சக்கரத்தாழ்வார் விக்கிரகங்களின் பின்புறத்தில் நரசிம்மர் வடிவமைக்கப்பட்டிருப்பார் என்று அறிய நேர்ந்தது. இதை பெருமாளின் மறைந்திருக்கும் உக்கிரம் என்பதற்கான குறியீடு எனலாமா ?

நன்றி 


மதுசூதனன் சம்பத்