Sunday, September 30, 2018

ஐவரின் சக்தி




ஜெ


அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றுமில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே

தற்செயலாக திருமந்திரத்தில் இந்த வரிகளை வாசித்தேன். பாஞ்சாலி என்ற உருவகத்தை துர்க்கையின் வடிவமாகவும், சாக்த மதத்தின் நோக்கிலும் நீங்கள்தான் அமைத்திருக்கிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஏற்கனவே அந்த மரபு இங்கே இருந்திருக்கிறது. அது இங்கே சாக்தம் வழக்கொழிந்தபோது மறைந்து ஃபோக் வழிபாட்டில் மட்டும் இருந்திருக்கிறது. அதுதான் திரௌபதை அம்மன் வழிபாடு என நினைக்கிறேன்

இங்கே திருமூலர் ஐந்து என்பது ஐந்து புலன்களை. அதை ஆளும் ஆத்மாதான் அவள் என்று சொல்லப்படுகிறது. அது பரம்பொருளின் வடிவான சக்தி. ஆனால் ஐந்து புலன்களாக பாண்டவர்களைச் சொல்லும் வழக்கம் உண்டு. வாயுவுக்குரிய மூச்சுதான் பீமன். இந்திரனுக்குரிய கண்கள்தான் அர்ஜுனன். நாக்கு யுதிஷ்டிரன். செவியும் தோலும் நகுலனும் சகதேவனும்.

இந்தப்பார்வை எனக்கு மிக வியப்பை அளித்தது. வெண்முரசு நவீனச்சூழலில் ஒரு பெரிய மீட்ப்புப்பணியைச் செய்கிறது

சந்தானம்