Saturday, September 8, 2018

கர்ணன்



ஒரு வாசகர் வெண்முரசிலேயே துயரமான பகுதி என்று ஒன்றைப்பற்றி எழுதியிருந்தார். பல இடங்கள் உள்ளன. சங்கடமான இடங்கள். கடுமையான இடங்கள். ஆனால் உச்சகட்டமாக நான் நினைப்பது ராதையுடன் கர்ணனின் உறவு முறியும் இடம்தான். அவள் அம்மா அல்ல தந்தைக்கு மனைவிதான் என அவன் அறிகிறான் அவனுக்கு இருந்த கடைசி உறவும் இல்லாமலாகிறது. வாழ்க்கையே அர்த்தமில்லாமலாகிறது. ஒரு கோடீஸ்வரன் கோடிகளை இழப்பது போல அல்ல இது. ஒரு பிச்சைக்காரன் இடுப்புத்துணியை இழப்பதுபோல. அந்தக்காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. ஆனால் மிக பூடகமாக அது சொல்லப்படுகிறது. பெரிதாக ஏதும் நடக்கவில்லை. அவர்கள் மென்மையாகப் பேசி சாப்பிட்டு விடைபெற்ற்த்தான் பிரிகிறார்கள். உறவு அப்படியேதான் உள்ளது. ஆனால் உறவின் உள்லே இருக்கும் அர்த்தம் மட்டும் அழிந்துவிட்டது

மனோகர்