Sunday, September 16, 2018

போர்கள்




போர் அன்றும் இன்றும்- ஷாகுல் ஹமீது


அன்புள்ள ஜெ

இன்றைய காலகட்டத்தின் போரில் ஈடுபட்டு அறிந்தவரான ஷாகுல் ஹமீது எழுதிய கட்டுரை மிகப்பெரிய புரிதல்களை அளித்தது. மகாபாதப்போரில் இருந்து இன்றுவரை போர்கள் ஒரேவகையாகத்தான் நடக்கின்றன என்று புரிந்துகொண்டேன். போர்கள் என்றால் பல ஆயிரம்பேரை சேர்த்துக்கொண்டு செல்வது. அப்படியானால் நிர்வாகப்பிரச்சினைகள் ஒன்றாகவே இருக்கமுடியும். வழி நிர்வாகம், உணவு நிர்வாகம், நீர் நிர்வாகம் இவைமூன்றும்தான் மிகப்பெரிய சிக்கல் என்று தெரிந்தது. ஷாகுல் அவர்களுக்கு நன்றி

மகாதேவன்

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்