Wednesday, September 19, 2018

பீமன்



ஜெ

சென்ற நாவலில் போர்க்களத்தை வாசித்து முடித்ததும் 18 நாளும் இதுதானே நடக்கப்போகிறது, என்ன பெரிசாக நடந்துவிடும். இதை மீண்டும் மீண்டும் எழுதவேண்டியதுதான் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் இந்நாவலில் மீண்டும் போரைப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒருநாள் போரிலிருந்து வெறிகொண்டு எழுந்து மீண்டும் போரிடுகிறார்கள் . போர்க்களத்தில்தான் எத்தனை நுட்பமான தந்திரங்கள். எத்தனை மன ஓட்டங்கள். பீமன் இன்றையநாள் கொள்ளும் வெறி பிரமிக்க வைக்கிறது. மூலமகாபாரதத்திலேயே ஒருமுறை கூட தோற்காமல் நின்று பொருதியவன் பீமன் என்றே சொல்லப்படுகிறது. அந்த வேகம் அவனுக்கு இப்போது அம்பைக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியில் இருந்தே வந்தது. சூழ்ந்துகொள்வோமென்ற நிலையிலும் அவன் ஒரு கணம்கூட தயன்காமல் வெறிகொண்டு போரிடுகிறான். அவன்தான் இன்றையபோரின் ஹீரோ.

சக்திவேல்