Monday, November 5, 2018

வ்யூகம்




ஜெ

முதல்முறையாக இப்போதுதான் வியூகம் என்பது எப்படிச் செயல்படுகிறது என்பதை வெண்முரசிலே பார்க்கமுடிந்தது. கூர்மவியூகம் நாற்கரவியூகத்தால் எப்படிச் சூழப்படுகிறது, எப்படி உடைகிறது, எப்படி அதைக்காத்துக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் தெரிகிறது

ஏனென்றால் சஞ்சயன் தொலைவிலிருந்து அதைப்பார்க்கிறான். அருகே பார்க்கையில் எவராலும் வியூகத்தைப்பார்க்க முடியாது. ஆகவே வெவ்வேறு போர்வீரர்களின் பார்வை வழியாக சொல்லப்படும்போது வியுகத்தின் செயல்பாடு வரவே இல்லை

ராஜன் பாலு