Tuesday, November 6, 2018

குருக்ஷேத்திரம்




ஜெ

உண்மையான போரைப்பார்த்துக்கொண்டே வந்த சஞ்சயன் திடீரென்று ஏதோ நிகழ்ந்து மேலும் மேலும் பெரியபோர்களைக் காண ஆரம்பிக்கிறன். ஓஷோ குருக்ஷேத்திரப்போரை இப்படித்தான் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். சஞ்சயன் அடைந்த ஞானதிருஸ்டி என்பது இதுதான். அது கடந்து பார்க்கக்கூடிய பார்வை

நன் ஓஷோவின் நூல்களை வாசிக்கும் நாட்களிலே ஒன்று நிகழ்ந்தது. எனக்கு கடுமையான காய்ச்சல். அப்போது ஒரு அரைக்கனவில் என் உடலுக்குள் ஒரு மாபெரும் போர் நடப்பதாக நினைத்துக்கொண்டேன். அதுவும் ஒரு குருசேத்திரம்தானே/? வெள்ளை அணுக்களும் கிருமிகளும் நடத்தும்போர் அது. அதில் லட்சக்கணக்கில் சாகிறார்கல்

இந்த பூமி முழுக்க நடக்கும் ஒவ்வொரு கணமும் நடக்கும் போரை சஞ்சயன் பார்க்கிறான்

பெ. லட்சுமணன்